விறகு குறும்பட வெளியீடும் ஆசிரியர்கள் கெரவிப்பும்

நானிலம் கலைஞர் வட்டத்தினால் தயாரிக்கப்பட்ட விறகு குறும்பட வெளியீடும், ஆசிரியர்கள் கெளரவிப்பும் இன்று(05.09.2017) தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் நடைபெற்றது.

கல்வியகத்தின் ஆலோசகர் சி.தில்லையன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. க,சூரியகுமாரன் (வளிமண்டலவியல் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்களும், கௌரவ அதிதிகளாக திரு.க. சக்தியானந்தன் (மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்) , திரு. சா.கதிர்காமத்தம்பி (ஆசிரியர்), செல்வி. மூ.சந்திரலேகா (ஆசிரியர்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் இந்நிகழ்வில் நானிலம் கலைஞர் வட்ட உறுப்பினர்கள், கல்வியகத்தின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர். 

நிகழ்வில் குறும்படம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் , ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் நாட்டிற்கு சிறந்ததோர் வானிலை முன்னறிவிப்புச் சேவையினை வழங்கி வரும் மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களத்ின் அதிகாரி திரு. சூரியகுமாரன் அவர்கள் கல்விநிலைய மற்றும் கலைஞர் வட்ட ஆலோசகர் தில்லையன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
























Previous Post Next Post