வந்தாறுமூலையில இந்த வஞ்சிக்கொடி... -பாடல்

(Akshayan) வந்தாறுமூலையில இந்த வஞ்சிக்கொடிய பார்த்தேனடா ... எனத் தொடங்கும் கானாப் பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.  கிழக்கு மாகாணத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்களைக் கொண்டு எழுதப்பட்ட முதலாவது காதல் கானாப்பாடலாக இது விளங்குகின்றது.

கிழக்கோரப்பாட்டு என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப்பாடலை ஈழத்துப் பாடகர் அருள்கிருஷ்னா அவர்கள் பாடியுள்ளதுடன், பாடலுக்கான வரிகளை கமல்ராஜ் அவர்கள் எழுத பாடலுக்கான ஒளிப்பதிவினை ரசாக் கமலரூபன்  அவர்கள் செய்திருக்கின்றார். 

கிராமங்களின் பெயர்களுடன் தொடர்புபடுத்தி காதலை அழகான முறையில் இந்தப் பாடலுக்கூடாகச் சொல்லியிருக்கின்றார் பாடலாசிரியர். ஊர்களின் பெர்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்தப் பாடலை சிறந்த முறையில் மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய வகையில் அழகாக இசையமைத்துப் பாடியுள்ள பாடகர்,  பாடலாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளரையும் பாராட்டுவதுடன், இந்தப் பாடலை சார் செய்து எமது ஆதரவையும் வழங்குவோம்.


Vantharumoolaiyila intha .....Song
Please share this song in facebook .
Previous Post Next Post