களுவன்கேணியை சேர்ந்த இளம் யுவதி ரயிலில் மோதுண்டு ஸ்தலத்திலே பலி

(Dilaxshan)ஏறாவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட , வந்தாறுமூலையில் ரயிலில் மோதி யுவதி பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.




 களுவன்கேணி காளிகோயில் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை நிஷாந்தினி (வயது-23) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி இருவரும் களுவன்கேணியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்தாறுமூலை நோக்கி வந்து கொண்டிருந்த போதே கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த உதயா தேவி ரயிலில் மோதுண்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post