30 November 2012

இரண்டாவது நாளாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் சேவை

SHARE
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்குகின்ற மக்களின் நலன்கருதி மேற்கொள்ளப்பட்டுவரும் நடமாடும் சேவை நடவடிக்கைககள் இரண்டாவது நாளான இன்றுடன் முடிவடையும்.

 
நேற்றைய தினம் (29.11.2012) செங்கலடியில் உள்ள பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவைகள் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்நடமாடும் சேவையில் காணி பதிவு தினைக்களம், தேசிய வீடமைப்பு அதிகார சபை, மின்சார சபை, ஆட்பதிவு தினைக்களம், பொலிஸ் தினைக்களம் முதலிய பல அரச தினைக்களங்கள் பங்குகொண்டு சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















SHARE

Author: verified_user