சுனாமி வருமுன்னர் இவ்வாறு கிணற்று நீர்மட்டம் குறைவடையும் என்ற தோற்றப்பாட்டிலேயே மக்கள் இவ்வாறு பீதியடைந்தனர்.
கிணற்று நீர்மட்டம் கரையோரப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் குறைவடைவதற்கு பல்வேறு காரணிகள் காணப்படலாம்.
1. அதிகளவிலான ஆவியாக்கம்
2. கடல்நீர்மட்டம் தாழ்த்தப்படுதல் (வற்றுப்பெருக்கு, சுனாமி, அதிக ஆவியாக்கம்)
3. புவிநடுக்கங்களினால் ஏற்படும் தகட்டசைவு
4. அண்மையில் உள்ள நீர்த்தேக்கத்தின் மட்டம் குறைவடைதல்
போன்ற காரணிகளைக் குறிப்பிடமுடியும். ஆனால் குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு அண்மையாகவுள்ள எந்தவொரு பிரதேசத்திலும் சுனாமி அல்லது புவிநடுக்க நிலைமைகளும் ஏற்படவில்லை என்பதுடன், இது குறித்து மக்கள் அச்சமடைய வேண்டியதுமில்லை.