16 January 2014

மாவடிஓடை பாலம் மற்றும் வள்ளியாறு பாலம் சேதமடைந்துள்ளது

SHARE
ஆற்றுவடிநிலங்களின் நீரேந்து பிரதேசங்களில் இடம்பெற்ற அதிக மழைவீழ்ச்சியால் ஆறுகள்  பெருக்கெடுத்தமை காரணமாக முந்தணி ஆற்றில் காணப்படும் மாவடிஓடைப்பாலம் மற்றும் மியான்கல் ஆற்றில் காணப்படும் வள்ளியாற்றுப்பாலம் என்பன சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த வருடங்களில் கூட குறிப்பிட்ட பாலங்கள் வெள்ளத்தினால் சேதமடைந்து தற்காலிகமாக திருத்தப்பட்டிருந்தன. வள்ளியாற்றுப் பாலப்பகுதியில் மக்களின் போக்குவரத்திற்கு அங்குள்ள இராணுவத்தினர் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


SHARE

Author: verified_user