19 December 2012

கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது

SHARE
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்தினதும் கல்விசார் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால், மாணவர்களின் நலன்கருதி கல்வி நடவடிக்கைகளை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி கிட்ணர் கோவிந்தராஜா தெரிவித்தார்.
SHARE

Author: verified_user