31 October 2013

கேதார கெளரி அம்பாள் ஆலய கும்பாபிசேகம்

SHARE
சித்தாண்டி - மாடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் (30.10.2013) புதிதாக அமைக்கப்பட்ட கேதார கெளரி அம்பாள் ஆலயம் மற்றும் மணித்தூண் ஆகியவற்றுக்கான கும்பாபிசேக நிகழ்வுகள் ஆலய தலைவர் ஆ.தேவராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. 


மணித்தூணானது சித்தாண்டி 01 பொதுமக்களால் அமைத்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது ஆலய பரிபாலன சபையினால் பலர் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


திருக்கேதார கெளரிவிரத நிகழ்வுகளில் எதிர்வரும் 03.11.2013 அன்று திருக்காப்பு வழங்கும் நிகழ்வு இடம்பெற இருப்பதுடன், எதிர்வரும் 04.11.2013 அன்று திருக்கும்பம் சொரிதல் நிகழ்வும் நடைபெறும்.















SHARE

Author: verified_user