சித்தாண்டி, வந்தாறுமூலை பிரதேசங்களில் வெள்ள அபாயம்

இன்று (06.01.2015) காலை தொடக்கம் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக மட்டக்களப்பின் பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிவருகின்றன. அந்தவகையில் சித்தாண்டி, வந்தாறுமூலை பிரதேசங்களின் பல தாழ்நிலப் பகுதிகளும் வெள்ள நீரில் மூழ்கி வருகின்றன. அத்துடன் பல கிராம உட்பகுதிகளிலும் நீர்வடிந்தோட முடியாமல் மழைநீர் தேங்கியும் காரணப்படுகின்றது.


இதே வேளை உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகளும் திறந்து விடப்பட்ட நிலையில் உள்ளமையால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
(படங்கள்: வாணன், பிரசாந்தன்)







Previous Post Next Post