Showing posts with label அனர்த்தம். Show all posts
Showing posts with label அனர்த்தம். Show all posts

08 April 2026

காலநிலை-திறன்மிகு விவசாயம்

காலநிலை-திறன்மிகு விவசாயம்

 

1. நீர் மேலாண்மை (Water Management)

விவசாயத்தில் நீரைச் சேமிப்பதற்கும், குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவதற்குமான நுட்பங்கள்:

  • 50 லி தண்ணீரில் 350 மரங்கள் வளர்க்கும் நுட்பங்கள் - குறைந்த நீர் மேலாண்மை மற்றும் களை மேலாண்மை குறித்த விரிவான பயிற்சி வீடியோ.

  • நெல் விளைச்சலை உயர்த்த நீர் மேலாண்மை ரகசியங்கள் - நெல் சாகுபடியில் நீர் மேலாண்மை குறித்த நிபுணர்களின் ஆலோசனை.

  • மண், நீர் மற்றும் விதைகளைப் புரிந்து கொள்ளுதல் - அடிப்படை நீர் மேலாண்மை பயிற்சி.

11 November 2018

GAJA சூறாவளி

GAJA சூறாவளி

GAJA சூறாவளி.

தென்கிழக்கு வங்காளவிரிகுடாவில் அந்தமான்தீவிற்கருகே காணப்பட்ட வலுவடைந்த தாழமுக்கமானது (Deep Depression) கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து இன்று (11.11.2018/0000 UTC) சூறாவளியாக வலுவடைந்துள்ளது.

இது தற்போது அந்தமான்தீவின் போட் விலர் (Port Blair) இருந்து மேற்கு- வடமேற்காக 400 கிலோமீற்றர் தூரத்திலும் தமிழ்நாட்டின் சென்னை நகரிலிருந்து வடகிழக்காக 990 கிலோமீற்றர் தூரத்திலும் ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூரிலிருந்து கிழக்கு- தென்கிழக்காக 1050 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

இது அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து வலுவான சூறாவளியாக (Severe Cyclonic Storm) தோற்றம் பெறும்.

பின்னர் இது அதனையடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, பின்னர் மேற்கு- தென்மேற்கு திசையில் தனது நகரும் திசையை மாற்றி அடுத்துவரும் 48 மணித்தியாலத்தில் வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திரா பிரதேசத்திற்கும் இடையிலான கரையை நோக்கி நகரும்.

இதேவேளை, இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகரும்போது இதன் வலு படிப்படியாக குறைவடைந்து சூறாவளியாக வட தமிழ்நாட்டிற்கும் தென் ஆந்திரா பிரதேசத்திற்கும் இடையில் எதிர்வரும் 15ம் திகதி பிற்பகல் வேளை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Mr. K.Sooriyakumaran, meteorology department)


18 October 2017

மழை பற்றிய சகுனங்கள்...!!!

மழை பற்றிய சகுனங்கள்...!!!





மலைக்க வைக்கும் நம் முன்னோர்களின் சாதனை!!!




கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும்.









1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை









2. தட்டான் தாழப் பறந்தால் மழை









3. அந்தி ஈசல் அடை மழை









4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.









5. தவளை கத்தினால் மழை









6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை









7. கொக்கு மேடேறினால் மழை









8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப்




பார்த்தால் மழை









9. கழுதை காதை உயர்த்தினால் மழை









10. ஈசல் பறந்தால் மழை









11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை









12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது




திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை









13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.









14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை









15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை









16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை









17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை









18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை









19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.









20. மயில்கள் நடனமாடினால் மழை









21. பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை









22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை









23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை









24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை









25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை









26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.









27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.









28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.









29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை









30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.









31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை









32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை









33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.









நம் இயற்கையை கண்டறிந்த இயற்கை ஞானிகளை போற்றுவோம்.....


21 May 2017

பேரில்லாவெளி பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம்

பேரில்லாவெளி பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம்


(Siva) கோறளைப்பற்று -தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பேரில்லாவெளி கிராம சேவை பிரிவில் அடங்கும் கூழாவடி கிராமத்தில் தொடர்ந்து காட்டு யானைகள் மக்களின் உயிரையும் ,உடமையையும் தாக்கி அழித்தவண்ணம் உள்ளது .




இப் படங்கள் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் -கிரான் , இதற்குள் உட்பட்ட பேரிலாவெளி கிராம சேவைப்பிரிவுக்குட்பட்ட கூழவடி கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாயியின் இருப்பிடம் ஆகும்.



அந்த விவசாயியின் சொத்து , உடமைகள் காட்டு யானையால் முற்றாக அழிக்க பட்டு அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.





அதிகாரிகளே, அரசியல்வாதிகளே இது உங்களின் கவனத்திற்கு...
































06 January 2016

சித்தாண்டி, வந்தாறுமூலை பிரதேசங்களில் வெள்ள அபாயம்

சித்தாண்டி, வந்தாறுமூலை பிரதேசங்களில் வெள்ள அபாயம்



இன்று (06.01.2015) காலை தொடக்கம் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக மட்டக்களப்பின் பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிவருகின்றன. அந்தவகையில் சித்தாண்டி, வந்தாறுமூலை பிரதேசங்களின் பல தாழ்நிலப் பகுதிகளும் வெள்ள நீரில் மூழ்கி வருகின்றன. அத்துடன் பல கிராம உட்பகுதிகளிலும் நீர்வடிந்தோட முடியாமல் மழைநீர் தேங்கியும் காரணப்படுகின்றது.







இதே வேளை உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகளும் திறந்து விடப்பட்ட நிலையில் உள்ளமையால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


(படங்கள்: வாணன், பிரசாந்தன்)