GAJA சூறாவளி.
தென்கிழக்கு வங்காளவிரிகுடாவில் அந்தமான்தீவிற்கருகே காணப்பட்ட வலுவடைந்த தாழமுக்கமானது (Deep Depression) கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து இன்று (11.11.2018/0000 UTC) சூறாவளியாக வலுவடைந்துள்ளது.
இது தற்போது அந்தமான்தீவின் போட் விலர் (Port Blair) இருந்து மேற்கு- வடமேற்காக 400 கிலோமீற்றர் தூரத்திலும் தமிழ்நாட்டின் சென்னை நகரிலிருந்து வடகிழக்காக 990 கிலோமீற்றர் தூரத்திலும் ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூரிலிருந்து கிழக்கு- தென்கிழக்காக 1050 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.
இது அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து வலுவான சூறாவளியாக (Severe Cyclonic Storm) தோற்றம் பெறும்.
பின்னர் இது அதனையடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, பின்னர் மேற்கு- தென்மேற்கு திசையில் தனது நகரும் திசையை மாற்றி அடுத்துவரும் 48 மணித்தியாலத்தில் வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திரா பிரதேசத்திற்கும் இடையிலான கரையை நோக்கி நகரும்.
இதேவேளை, இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகரும்போது இதன் வலு படிப்படியாக குறைவடைந்து சூறாவளியாக வட தமிழ்நாட்டிற்கும் தென் ஆந்திரா பிரதேசத்திற்கும் இடையில் எதிர்வரும் 15ம் திகதி பிற்பகல் வேளை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Mr. K.Sooriyakumaran, meteorology department)
11 November 2018
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
