05 April 2026

15 ஆவது சோட்டோகான் கராத்தே சாம்பியன்ஷிப் சுற்றுப்போட்டி - 2025 (2026)

SHARE


 15 ஆவது  சோட்டோகான் கராத்தே சாம்பியன்ஷிப் சுற்றுப்போட்டி - 2025 (2026)


இலங்கை சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தினால் கடந்த 04.04.2026 அன்று நடைபெற்ற 14 வயதிற்கு மேற்பட்ட போட்டியில் ஜப்பான் கராத்தே டோ சோட்டோகான் கற்றை நிறுவனத்தின்(JKSSA) மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை மற்றும் மயிலம்பாவெளி பயிற்சி நிலைய மாணவர்கள் சாதனை புரிந்துள்ளார்கள்.


போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் 


R. ரணுஸ்ரன் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.


ச. நோயல் றிதுஷன் சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.


சி. சதீஸ்வரன் சண்டைப் போட்டி மற்றும் காட்டா (Kata) போட்டி ஆகிய இரண்டிலும் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.


ந. யதோஷன், கி. பியூரி டெர்சியா மற்றும் J. ஜெனுஸ்ரன் ஆகியோர் இப்போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர்.


இம்மாணவர்கள்  வாழைச்சேனை இந்துக்கல்லூரி, கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம், தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரி ஆகிய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்களை JKSSA கழகத்தின் பிரதம போதனாசிரியர் ஷிஹான் H.M. விஜயகுமார் மற்றும் போதனாசிரியர்களான  சென்செய் M. நாகராஜா, சென்செய் T. சதானந்ததகுமார் ஆகியோர் இம்மாணவர்களை பயிற்றுவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.













SHARE

Author: verified_user