19 January 2013

சித்தாண்டி பிரதேசத்தின் இயல்பு நிலை ஸ்தம்பிதம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடையடைப்புடனான ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.  சித்தாண்டி பிரதேச மக்களும் தமது கடைகள் மற்றும் பயணங்களை தவிர்த்து  நில அபகரிப்புக்கு எதிரான தன்மையினை வெளிப்படுத்தியிருந்தார்கள். 

பாடசாலைகளில் மாணவர் வரவின்மையினால் வெறிச்சோடிப் போயிருந்ததனை அவதானிக்க முடிந்தது.  வீதிகளில் மக்கள் போக்குவரத்தின்றி அமைதிநிலை நிலவியது.  தனியார் கல்வி நிலையங்களும் எதுவித வகுப்புக்களையும் நேற்யை தினம் நடாத்தாத தமது ஆரவை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










SHARE

Author: verified_user