26 February 2013

சந்தணமடு ஆறு நடைச் சுற்றுலா

SHARE
தவசி லேணிங் சிற்றியானது குறைந்த செலவில் அல்லது செலவின்றி சுற்றுலாக்களை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றது. அந்தவகையில் கடந்த 24.02.2013 அன்று சந்தணமடு ஆறு நோக்கிய நடைச்சுற்றுலா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் வி.எஸ். அக்சயன் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இச்சுற்றுலா நிகழ்வில் கல்வி நிலைய ஆலோசகர் சி.திலகன் , மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளம்மிக்கதும், புவியியல் மற்றும் கல்வி சார்ந்த அம்சங்களை களரீதியாக அவதானிக்கக்கூடிய பிரதேசங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதை நோக்ககாக் கொண்ட இச்சுற்றூவில் மாணவர்களுக்கு ஆறுகள் பற்றிய விளக்கம் வழங்கப்பட்டதுடன், ஆற்றில் மிகவும் பாதுகாப்பான முறையில் நீராடுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















SHARE

Author: verified_user