25 May 2013

சித்தாண்டியில் "பரிசாரகம்" நூல் வெளியீடு

SHARE
சித்தாண்டி மருத்துவர்குடித் திருவிழாக் குழுவினரின் பரிசாரகம் நூல் வெளியீடு இன்று (25.05.2013) காலை 10.00 மணியளவில் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் சி.ரவிந்திரன் தலைமையில் இடம்பெற்றது.


நூல் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் மௌனகுரு அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக   மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன்,  முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் கிருஸ்டி முருகுப்பிள்ளை, ஆதவன் அச்சக உரிமையாளர் வை.வீரசிங்கம், ஓய்வுபெற்ற அதிபர் செபஸ்தியான் கவுரியல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
நூல்வெளியீட்டு வைபவத்தில் பிரதேசத்தின் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
(படங்கள்:- நந்தன், கோபு)
 












 

SHARE

Author: verified_user