சித்தாண்டி நாககன்னி ஆலய சூழலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16.06.2013) அன்று காலை 8.00 மணியளவில் சிரமதான நிகழ்வொன்று இடம்பெற உள்ளது. சித்தாண்டி நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இச்சிரமதான நிகழ்வு நிறைவு பெற்ற பின்னர், பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெற உள்ளதாக சித்தாண்டி நலன்புரி அமைப்பின் செயலாளர் பூ.கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.

