
சித்தாண்டி 01 வினாயாகர் கிராமத்தில் அமைந்துள்ள அலைமகள் பாலர் பாடசாலை வளாகத்தினுள் கல்வி பயிலும் பாலர் பாடசாலை மாணவர்களது மதிய உணவுத் திட்டத்திற்கு உதவியளிக்கும் வகையில் வேர்ட்விசன் நிறுவனத்தினரால் ஒருதொகை பயிர்க்கன்றுகள் இன்று(21.06.2013) காலை வழங்கி நடப்பட்டன. அத்துடன் பொதுமக்களுக்கு பயிர்நடுதல் தொடர்பான போதிய விளக்கமும் வேர்ள்ட்விசன் நிறுவனத்தினரால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன், வேர்ள்ட்விசன் நிறுவன அதிகாரிகள், பத்திரகாளி அம்மன் ஆலய செயலாளர் க.புவிதரன் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.
(பிருந்தன்)