26 April 2014

வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

SHARE
(Sanjee)மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கடந்த கால யுத்தத்தினால் பெரிதும்  பாதிக்கப்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று(25) வெள்ளிக்கிழமை  ஈரளகுளம் கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்றது.



பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

ஜரேப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 117 புதிய வீடுகளும் புனரமைக்கப்பட்ட  57 வீடுகளுமாக மொத்தமாக 174 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.







SHARE

Author: verified_user