கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் சம்பியன் போட்டியில் 19 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவு மற்றும் 15 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவுகள் ஆகிய நான்கு பிரிவுகளிலும் ஐயங்கேணி தமிழ் வித்தியாலயம் சம்பியன் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இந்தப் பாடசாலை 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண மட்டத்தில் 2 சம்பியன்களையும், 2013 ஆம் ஆண்டு 3 சம்பியன்களுக்கான விருதுகளையும், 2014 ஆம் ஆண்டு 4 சம்பியன்களையும் தனதாக்கி சரித்திரம் படைத்துள்ளது. சென்ற ஆண்டு தேசிய மட்டத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கிடையில் இடம்பெற்ற சதுரங்கம் (chess) போட்டிகளில் ஐயங்கேணி தமிழ் வித்தியாலய மாணவி கே. நிஸாந்தினி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
