13 December 2012

வந்தாறுமூலையில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவிக்கு பாராட்டு விழா

SHARE
மட்டக்களப்பு, கல்குடா வலயத்தில் அமைந்துள்ள வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தின் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கும், அதற்கு துணை நின்று பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா ஒன்று இடம்பெற்றது.
ரவீந்திரன் - ரஜிதா எனும் இம்மாணவி கடந்த 2012 ஆகஸ்டில் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 154 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்திருந்தார். 
பாடசாலை சமூகத்தின் சார்பில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையைச் சேர்ந்த சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. தில்லைநாதன் அவர்களும், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோத் அவர்களும் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றொர்கள் , மாணவாகளும் கலந்துகொண்டனர்.









  (Photos by:- Uthayan)
SHARE

Author: verified_user