20 February 2013

கவனிப்பாரற்றுக் கிடக்கும் வீதி: மக்கள் கவலை

SHARE
சித்தாண்டி பிரதேசத்திலிருந்து சந்தணமடு நோக்கிச் செல்கின்ற முக்கிய வீதியானது தற்போது  ஏற்பட்ட வெள்ளத்தின் பின்னர் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக வீதியைப் பயன்படுத்தும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 வீதிக்கு குறுக்காக பல இடங்களில் சிறியளவிலான நீரோடுவதனாலும், வெள்ள நீரினாலும் வீதியின் பல இடங்களில் பள்ளங்களும், நீர்தேங்கி நிற்பதனையும் அவதானிக்க முடிகின்றது.

சித்தாண்டி பிரதேச மக்களின் விவசாய நிலங்களுக்கு செல்வதற்குரிய முக்கிய பாதையாகக் காணப்படும் இவ்வீதியினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு திருத்தி தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகின்றனர்.




SHARE

Author: verified_user