11 March 2013

பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சைவ வினாவிடைப் போட்டி

SHARE
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சைவவினாவிடைப் போட்டி ஒன்றினை சித்தாண்டி , மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய நிருவாகத்தினர்  நேற்று (10.03.3012) இரவு நடாத்தியிருந்தனர். நிகழ்விற்குரிய ஒழுங்குபடுத்தலை ஆலய நிருவாகம் சார்பில் பட்டதாரி உத்தியோகத்தர் ஏரம்பராசா - பிரபானந்தராசா அவர்கள் ஒழுங்குபடுத்தியதுடன், நிகழ்விற்குரிய பரிசில்களை புன்னியமூர்த்தி - பரமேஸ்வரன் அவர்கள் வழங்கியிருந்தார்.

சித்தாண்டி, மாவடிவேம்பு கிராமங்களில் காணப்பட்ட பாடசாலைகளின் தரம் 05 ஐச் சேர்ந்த மாணவர்கள் இவ்வினாவிடைப்போட்டியில் கலந்துகொண்டனர்.  நிகழ்வுகளில் நடுவர்களாக  சமுர்த்தி உத்தியோகத்தர் வினாயகமூர்த்தி - காந்தியசீலன்,  அறநெறிப் பாடசாலை அதிபர் வாரிக்குட்டி - கருணாகரன் ,  ஆசிரியர் திருமதி பரமேஸ்வரி - சிறிதரன் அவர்களும் கடமையாற்றினர்.


வினாவிடைப் போட்டியில்  வெற்றியீட்டிய பாடசாலைகளின்  விபரம்.
1. சித்தாண்டி இராமகிருஸ்னாவித்தியாலயம்.
2. வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயம்.
3. உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம்.
4. மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயம்.
5. உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம்.
6. வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்.














SHARE

Author: verified_user