மட்டக்களப்பு சித்தாண்டி விநாயகபுரத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான குணசீலன் பிள்ளையான் (35 வயது) என்பவர், அவரது வீட்டினுள்ளிருந்தே சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வேலைக்குச் செல்வதாகக் கூறி நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் பகல் வீட்டில் சடலமாக காணப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீரின் உத்தரவுக்கமைய சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

