25 May 2013

ஆலய வேப்ப மரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்

SHARE
வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலுள்ள வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க வகையில் நேற்று மாலையில் இருந்து பால் வடிகின்றது.

எதிர்வரும் திங்கள் கிழமை ஆலயத்தின் வருடாந்த பொங்கல் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு ஆலய மரத்தில் இருந்து பால் வடிகின்றமை அம்மனின் புதுமை எனக் கூறி இதனை பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் பக்திபரவசத்துடன் வழிபட்டும் வருகின்றனர்.

SHARE

Author: verified_user