14 June 2013

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர்

SHARE
சித்தாண்டியில் அமைந்துள்ள வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக  திரு. தினகரன்-ரவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.  புதிய அதிபராகக் கடமையேற்றுள்ள தி.ரவி அவர்கள்  கடந்த புதன்கிழமை (12.06.2012) அன்று தமது கடமையினை பாடசாலைக்கு சமூகமளித்து பொறுப்பேற்றுக்கொண்டார். 


இப்பாடசாலையில் பல ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்த வி.பஞ்சலிங்கம் என்பவர் இந்த ஆண்டினுடைய ஆரம்பத்தில் பாடசாலையை விட்டு வலயக்கல்வி பணிமனைக்கு வேலைஇடமாற்றம் செய்யப்பட்டதனால், த்காலிகமாக கடந்த 05 மாதங்களாக திரு.க.சுந்தரலிங்கம் என்பவர் அதிபராகக் கடமையாற்றியிருந்தார்.

தற்போது புதிதாகக் கடமையேற்றுள்ள  புதிய அதிபரான திரு. தி.ரவி என்பவர் வலயக்கல்வி அலுவலகத்தில் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளராகக் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user