30 July 2013

இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

SHARE
சித்தாண்டி 01 வினாயகர் கிராம கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் இன்று (30.07.2013) சுயதொழில் வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது. செலிங்கோ நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.கமலநாதன், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சிவநாதன் ஆகியோரின் தலைமை தாங்கி நடாத்தினர்.
இந்நிகழ்வில் செலிங்கோ முகாமையாளர் வை.லட்சுமிகரன், எஸ்.குணசீலன், சமுர்த்தி உத்தியோகத்தர் , கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பொ.வரதராஜ், இளந்தளிர் விளையாட்டுக் கழக தலைவர் சி.திருப்பதி, த..அனன்ரனி, ஜெயராணி மற்றும் பிரதேசத்திலுள்ள உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சை எழுதிய இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டனர்.





SHARE

Author: verified_user