கல்குடா கல்வி வலயத்திற்கான புதிய அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளராக திருமதி. சாமினி ரவிராஜ் அவர்கள் வலயக்கல்விப் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை 05.08.2013 திங்கட்கிழமை உத்தியோக ரீதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
வலயத்தில் அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய திரு. எஸ்.ஞானராஜா அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றதனால் அவ்விடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

