06 September 2013

வந்தாறுமூலையில் குடும்பஸ்தர் தற்கொலை

SHARE
மட்டக்களப்பு, வந்தாறுமூலையை சேர்ந்த குடும்பஸ்தர் இன்று அவரது வீட்டின் முற்றத்திலுள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.


ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேக் ஹவுஸ் வீதி, வந்தாறுமூலையில் வசிக்கும் கோநேசப்பிள்ளை சுதாகரன் என்ற (43 வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர்,கடந்த மாதமும் தற்கொலைக்கு முயற்சித்து காப்பற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE

Author: verified_user