03 November 2014

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற சித்தாண்டி மாணவர்களின் கண்டுபிடிப்பு

SHARE
சித்தாண்டி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்களின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட "ஸ்மாட்  தெளிகருவி (Smart Sprayer)" தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப்  பெற்றுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பினை தரம் 07 இல் கல்வி பயிலும் கே.கேதீஸ்வரன் மற்றும் தரம் 13 இல் கல்வி பயிலும் எஸ்.கேணுஜன் ஆகிய இரு மாணவர்களும் கண்டு பிடித்திருந்திருந்தனர். 


வெற்றியீட்டிய மாவர்களுக்கும்,   வழிகாட்டிய விஞ்ஞான ஆசிரியரான திரு.ரி.முரளிதரன் அவர்களையும், உதவி புரிந்த சகல பாடசாலையின் ஆசிரியர்களுக்கும், வழிநடாத்திய அதிபருக்கும் எமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.



SHARE

Author: verified_user