20 May 2013

சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும்

SHARE
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இலங்கையின் பலபாகங்களிலும் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் இந்த சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் எதிர்வுகூறியுள்ளது.


மழைக் காரணமாக மேல், தென், சப்ரகமுவ, மத்தி, ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்கள் பாதிக்கப்படும் வாயப்புக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள கடமைநேர வானிலை அதிகாரி சன்ன ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது

SHARE

Author: verified_user