24 June 2013

கிரான் பாலம் புனரமைப்பு

SHARE
மட்டக்களப்பின் குடும்பிமலை சார்ந்த விவசாயக் குடியிருப்புகளுக்கு செல்லும் கிரான் -தரவை வீதியில் அமைந்துள்ள கிரான் பாலம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. முந்தணி ஆற்றினுடைய வடிநிலப் பிரதேசத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை வாவியுடன் தொடபுடைய நீர்ப்பரப்பிற்கு மேலாக அமைந்துள்ள இந்தப் பாலமானது தற்காலிகமாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. 


கடந்த வெள்ள காலங்களில் சிறிதளவில் பாதிக்கப்பட்டிரந்த பாலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பாலத்தை புனரமைக்கும் பணிகள் கடந்த 03 ஆம் மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பாலத்தோடு தொடாச்சியாக அமைக்கப்பட்டுள்ள குரம்பு (Cause way) எனப்படும் பகுதியையும் அகற்றி விட்டு ஒரு நீண்ட பாலமாக அமைக்கும்போதே எதிர்காலத்தில் சித்தாண்டி போன்ற பிரதேசங்களில் வெள்ளநீர் விரைவாக வடிந்து செல்ல வழிவகுக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.





SHARE

Author: verified_user