10 July 2013

களுவன்கேணியில் பெண் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை

SHARE
மட்டக்களப்பு களுவன்கேணி கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு பிள்ளைகளின்   தாயான திருமதி ஞனதாசன் தேவி(வயது38) என்பவரே நேற்று காலை(9.7.2013) அலரி விதையை அரைத்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலம் தற்போது செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்த விசாரணைகளை ஏறாவூர் பொலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.
SHARE

Author: verified_user