25 August 2013

உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கான பாராட்டு விழா – 2013

SHARE
சித்தாண்டி – மாவடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தவசி லேணிங் சிற்றி எனும் கல்வி நிலையமானது உயர்கல்வி பெறவிருக்கும் மாணவர்களுக்கான பாராட்டு விழா ஒன்றினை இன்று நடாத்தியது.


 கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் வி.எஸ்.அக்சயன் அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் ஆலோசகர் சி.தில்லயைன், கல்வி நிலைய திட்டமிடல் இணைப்பாளர் க.சிவாங்கன் , உயர்கல்வியைத் தொடரவிருக்கும் மாணவர்கள் மற்றும் தரம் 12, 13 மாணவர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் மற்றும் கல்விக் கல்லூரி ஆகிய உயர்கல்விகளைத் தொடருவதற்கு தெரிவான மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிப் பாராட்டப்பட்டது.






SHARE

Author: verified_user