12 August 2013

கோரகலிமடு காளிநரசிங்க வைரவர் சடங்கு

SHARE
பாராம்பரிய விழுவியங்கள், கலாசார நடவடிக்கைகளை பின்பற்றுவதில் மட்டக்களப்பு மண்ணிற்கெண்டு ஒரு தனித்துவம் உண்டு . அந்தவகையில் சங்க காலத்தில் பின்பற்றப்பட்ட நடுகல் வழிபாடு என்பது தற்போதும் மட்டக்களப்பில் நிலைத்திருப்பதற்கு சான்றாக விளங்குவது மட்டக்களப்பு கோரகல்லிமடுவில் வருடாவருடம் மேற்கொள்ளப்படும் காளிநரசிங்க வரைவர் (கோறளையன் - பெரியவர்) கோவில் சடங்கு மூலம் நிரூபிக்கப்படுகின்றது.


கோரமல்லிமடு காளி நரசிங்க வைரவர் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலானது, குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்ந்த யானைப்பாகனான கோறளையன் என்ற ஒருவரது சமாதியில் அவரது ஆயுதங்கள் மற்றும் பயன்படுத்திய பொருட்களைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பூஜை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சடங்கு நிகழ்வின்போது முன்னாள்முதல்வரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களும் கலந்துசிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user