06 September 2013

சித்தாண்டி பிரதேசத்தில் கடும்மழை

SHARE
சித்தாண்டி பிரதேசத்தில் நேற்றைய தினம்(05.09.2013)  இடியுடன் கூடிய கடும்மழை பெய்தது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைநிலைமை காணப்படுகின்றது. 


இலங்கையில் சூரியன் உச்சம் கொடுப்பதனால் அதிக வெப்பம் காரணமாக திடீரென ஆவியாகி மாலை வேழையில் மேற்காவுகை மழையாக பெய்கின்றது. இந்த நிலைமை தொடர்ந்தும் சில நாட்களுக்கு தொடரும் என குறிப்பிடப்படுகின்றது.
SHARE

Author: verified_user