(Sanjee) வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலய மாணவிகள் இருவர் இலக்கணப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். மாகணமட்டத்தில் நடாத்தப்பட்ட இடைநிலைப்பிரிவு 05 இலக்கணப் போட்டியில் செல்வி.அனோஜா அரியரெத்தினம் முதலாம் இடத்தினையும், இடைநிலைப்பிரிவு 02 கட்டுரைப்போட்டியில் செல்வி:ரஜிதா ரவீந்திரன் முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
இவ் இருவரும் மாகாணமட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமைசேர்த்துள்ளனர்..


