19 August 2014

கிழக்கில் வானம் வறண்­டு­ வறட்சி தாண்டவமாடுகின்றது

SHARE

வானம் வறண்டால் சிறப் ­பொரு பூசனை செல்­லாது" என்றார் வள்­ளு வர். கிழக்கில் வானம் வறண்­டு­விட்­டது. ஜுன், ஜுலை ஆகிய இரண்டு மாதங்­க­ளிலும் ஒரு மில்லி மீற்றர் மழை கூட மட்­டக்­க­ளப்பில் பதி­வா­க­வில்லை. ஆனால் நாட்டின் பல பாகங்­க­ளிலும் மழை பெய்து பாத­க­மான வினை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது. மலை­ய­கத்தில் பெய்த மழை­யினால் மட்­டக்­க­ளப்பில் உயர்ந்த மலை­யக மரக்­கறி விலை­வாசி இன்­னமும் இறங்­க­வில்லை.
வான் மழை இன்றி வாடு­கின்றன பயிர்கள். நீர் ஏற்று நிலைகள் மற்றும் நீர் நிலைகள் யாவும் வற்­றி­விட்­டன. கால் நடைகள் மட்­டு­மன்றி, மனி­தர்­களும் குடி­நீ­ருக்கு அலை­கின்­றனர். குடி நீருக்கே தட்­டுப்­பாடு நிலவும் போது ஏனைய அன்­றாட நீர் பாவனை எப்­படி இருக்கும். மனி­தனை வாட்டி வதைக்கும் கச்சான் காற்று மற்றும் உஷ்ணம் வேறு.
மட்­டக்­க­ளப்பு, கதி­ர­வெளி தொடக்கம் துறை­நீ­லா­வணை வரை வடக்கு தெற்­காக நீண்டு கிடக்கும் ஒரு மாவட்­ட­மாகும். கிழக்கே வங்­காள விரி­குடா. மேற்கே அம்­பாறை மாவட்டம். அம்­பாறை மாவட்ட எல்­லைக்கும் வங்­கா­ள­வி­ரி­கு­டா­வுக்கும் இடையே மட்­டக்­க­ளப்பு, வாழைச்­சேனை மற்றும் பனிச்­சங்­கேணி வாவிகள். இவ் விரி­கு­டா­வுக்கும் மட்டு. வாவிக்கும் இடை­யி­லான கிரா­மங்கள் எழு­வான்­கரை எனப்­படும் நகரப் பகு­தி­யாகும். வாவிக்கு மேற்கே உள்ள கிரா­மங்கள் படு­வான்­கரை என அழைக்­கப்­ப­டு­கின்­றன. நக­ரப்­ப­கு­தி­யுடன் ஒப்­பி­டு­கையில் படு­வான்­கரை பின்­தங்­கிய பகு­தி­யாகும்.
மட்டு. மாவட்டம் 2464.4 கிலோ மீற்றர் நிலப்­ப­ரப்­பையும் 168.3 உட்­புற சதுர கிலோ மீற்றர் நிலப்­ப­ரப்­பையும் கொண்­டுள்­ளது. மாதுறு ஓயாவைத் தவிர வறட்சி வல­யத்தில் உற்­பத்­தி­யாகும் 14 ஆறுகள் உள்­ளன. 21 பெரிய குளங்­களும், 293 சிறிய குளங்­களும், மேலும் 250 கிராமப் பகுதி குளங்­களும் இருப்­ப­தாக மாவட்ட செய­ல­கத்­தினால் 1993 ஆம் ஆண்டில் வெளி­யி­டப்­பட்ட வெளி­யீடு ஒன்றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
மாவட்­டத்தை இரு கூறு­க­ளாகப் பிரிக்கும் வாவியும் வாழைச்­சேனை, பனிச்­சங்­கேணி ஆறு­களும் உட்­பட சுமார் 17 ஆறு­களும் 21 பாரிய குளங்­களும் மேலும் நூற்­றுக்­க­ணக்­கான சிறிய மற்றும் கிரா­மியக் குளங்­களும் இருந்தும் இங்கு வறட்சி வருடா வருடம் தாண்­ட­வ­மா­டு­கின்­றது.
எழு­வான்­கரை பகு­தியில் மட்டு. மாந­கர சபை பிரிவு, துறை­நீ­லா­வணை ஆகிய இடங்­களில் குடி­நீ­ருக்கு வருடம் முழு­வதும் தட்­டுப்­பாடு நில­வி­யது.
உன்­னிச்சை குடிநீர் விநி­யோகம் ஆரம்­பிக்­கப்­பட்ட பின் மாந­க­ர­சபை பிரிவில் மட்­டு­மன்றி காத்­தான்­குடி குடிநீர்ப் பிரச்­சி­னையும் தீர்ந்­தது. உன்­னிச்­சைநீர் ஆரை­யம்­பதி, ஏறாவூர் நகர், செங்­க­லடி ஆகிய மூன்று பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்கும் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளது.
துறை­நீ­லா­வ­ணைக்கு அம்­பாறை மாவட்­டத்­தி­லி­ருந்து குடிநீர் விநி­யோ­கிக்கப்­ப­டு­கின்­ற­தா­யினும் அது போது­மா­ன­தாக இல்லை என்று குறை கூறப்­ப­டு­கின்­றது. நீருக்குப் பதி­லாக காற்று வெளி­யேறி மானியை இயக்கி கட்­ட­ணத்தை அதி­க­ரிக்­கின்­றதாம். கொண்­ட­வட்­டவான் குளத்­தி­லி­ருந்து மற்­றொரு குடிநீர் திட் டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது பூர்த்­தி­யா­னதும் இக்­கி­ரா­மத்­துக்கு தாரா­ள­மான நீர் விநி­யோ­கி­க­கப்­படும் என அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.
செங்­க­லடி பிரிவில் பதுளை வீதி­யி­லுள்ள கொடு­வா­மடு, இலுப்­ப­டிச்­சேனை, வேப்­ப­வெட்­டுவான், பங்­கு­டா­வெளி, உறு­காமம், கர­டி­ய­னாறு, கித்துல் மரப்­பாலம், புல்­லு­மலை, மங்­க­ள­கம, ஈர­லைக்­குளம் ஆகிய கிரா­மங்­களில் குடி­நீ­ருக்கு தட்­டுப்­பாடு நில­வு­வ­தாக அப்­பி­ரிவு பிர­தேச செய­லாளர் உ.உதய ஸ்ரீதர் தெரி­வித்தார்.
போர­தீவுப் பற்று பிர­தேச செய­லக பிரி­வி­லுள்ள 43 கிராம சேவை உத்­தி­யோ­கத்தர் பிரிவில் 30 பிரி­வு­க­ளுக்கு தற்­பொ­ழுது பௌஸர் மூலம் குடிநீர் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தா­கவும். எஞ்­சிய 13 கிரா­மங்­க­ளுக்கும் இன்னும் சில தினங்­களில் விநி­யோ­கிக்­கப்­பட வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம் எனவும் போர­தீவுப் பற்று பிர­தேச செய­லாளர் என்.வில்வரெட்ணம் தெரி­வித்தார். 2012ஆம் ஆண்டு கணக்­கெ­டுப்­பின்­படி மேற்­படி 43 பிரி­வு­க­ளிலும் 12,455 குடும்­பங்­களை சேர்ந்த 43,579 பேர் வசிக்­கின்­றனர். இவற்றில் காக்­காச்­சி­வட்டை, வெள்­ளா­வெளி விவே­கா­னந்­த­புரம், காந்­தி­புரம், தும்­பங்­கேணி, சுர­வ­ணை­ய­டி­யூற்று, களு­முந்­தான்­வெளி, திக்­கோடை, பாலை­ய­டி­வட்டை, பலாச்­சோலை, றாண­மடு, நெல்­லிக்­காடு, பொறு­காமம், மலை­யார்­கட்டு, கண்­ணா­புரம், விவே­கா­னந்­த­புரம் ஆகிய கிரா­மங்­கள் வறட்­சியால் பாதிக்­கப்­படும் முக்­கிய கிரா­மங்­க­ளாகும்.
வாகரை பிர­தேசம் மிகவும் பின்­தங்­கி­யதும் யுத்­தத்­தினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட பிர­தே­ச­முமாகும். இங்­குள்ள கட்­டு­மு­றிவு கிரா­மத்தில் பாரிய நீர்ப்­பா­சனக் குளம் அமைந்­துள்­ளது. ஆனால் இக்­கி­ராம மக்­க­ளுக்கு குடிப்­ப­தற்கு நீர் இல்லை. வாகரை பிர­தே­சத்தில் கட்­டு­மு­றிவு ஆலங்­குளம், தோணி தாண்­ட­மடு, புனாணை, ஓம­டி­யா­மடு வட்­டவான் காயாங்­கேணி, மாங்­கேணி, கிரி­மிச்சை முத­லிய கிரா­மங்­களில் குடி­நீ­ருக்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. வாகரை பிரிவில் சுமார் 6,263 குடும்­பங்­களைச் சேர்ந்த 20,999 பேர் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இங்கு ஒரு கிரா­மிய குடிநீர் விநி­யோ­கத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும் ஒரு திட்­டத்­திற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வாகரை பிர­தேச செய­லாளர் ஆர். ராகு­ல­நா­யகி தெரி­வித்தார். ஒரு திட்­டத்­திற்கு சுமார் மூன்­றரைக் கோடி ரூபாவை செல­விட வேண்­டி­யி­ருப்­ப­தா­கவும் எனவே சகல கிரா­மங்­க­ளிலும் சாத்­தி­யப்­ப­டாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.
வவு­ண­தீவு பிர­தேச செய­லாளர் பிரிவில் சுமார் 7,430 குடும்­பங்­களை சேர்ந்த 26,199 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தேச செய­லாளர் எஸ்.சுதாகர் தெரி­வித்தார். பட்­டிப்­பளை பிர­தேச செய­லாளர் பிரிவில் அருள் நேச­புரம், கற்­சேனை, தாந்­தா­மலை, குழு­வி­னா­மடு, கடுக்­கா­முனை, பண்­டா­ரி­யா­வெளி முத­லிய பல கிரா­மங்­களில் குடி­நீ­ருக்குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வாறு இந்த மாவட்­டத்தில் உள்ள 14 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் அநே­க­மான பிரி­வு­களில் குடி­நீ­ருக்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.
14 பிரி­வு­க­ளிலும் 74,479 குடும்­பங்­களைச் சேர்ந்த 2இலட்­சத்து 52ஆயி­ரத்து 679 பேர் வறட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் என்று அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. 2012 ஆம் ஆண்டு கணக்­கெ­டுப்­பின்­படி மாவட்­டத்தின் சனத்­தொகை 1,62,742 குடும்­பங்­களில் 5,86,400 பேராகும். பாதிக்­கப்­பட்ட விபரம் இதனை எழுதும் போது பெறப்­பட்­ட­தாகும். சில­வேளை இது மேலும் அதி­க­ரிக்­கலாம்.
மழை­யின்றி வரட்சி ஏற்­பட்டால் பாசன வசதி குறையும். குடி­நீ­ருக்கும் மற்­றும் பாவ­னைக்கும் தட்­டுப்­பாடு நிலவும். வாழ்­வா­தாரம், குறிப்­பாக விவ­சாயம் பாதிக்­கப்­படும். வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்­கையே மேற்­படி 2,52,679 பேராகும். மழைக்கு எவரும் எத­னையும் செய்ய முடி­யாது. நிதி ஏற்­பா­டுகள் இருப்பின் வறட்சி நிவா­ரணம் வழங்­கப்­ப­டலாம். இல்­லையேல் வழங்­கப்­ப­டா­மலும் விடலாம். இந்த நிவா­ரணம் கூட சோளப் பொரி­யா­கவே அமையும். மேலே குறிப்­பிட்­டுள்ள அநேக கிரா­மங்­களில் இந்த வரு­டத்தில் மட்டும் வறட்சி ஏற்­ப­ட­வில்லை. வரு­டா­வ­ருடம் கோடை காலத்தில் அதா­வது, மே மாதம் தொடக்கம் செப்­டெம்பர், ஒக்­டோபர் மாதம் வரை வறட்சி நில­வு­கி­றது. இந்த வருடம் கூடு­த­லான வறட்சி அதி­க­மான கிரா­மங்­களில் ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு கடந்த வரு­டத்தில் மாரி காலத்தில் போது­மான அளவு வழ­மை­யாகப் பெய்யும் மழை பெய்­யா­மையும் இவ்­வ­ரு­டத்தில் குறை­வான மழைப் பெய்­த­மையும் கார­ண­மாகும்.
2013 ஆம் ஆண்டில் 1972.9 மில்­லி­மீற்றர் மழை பதி­வா­கி­யுள்ள போதிலும் செப்­டெம்­பரில் 82.3 மில்­லி­ மீற்­றரும் அக்­டோ­பரில் 24 மில்­லி­ மீற்­றரும் நவம்­பரில் 198.8 மில்லி மீற்­றரும் டிச­ம­் பரில் 271.1 மில்லி மீற்றர் மழை பதி­வா­கி­யுள்­ளது. சுமார் 70 ஆண்­டு­களின் பின்னர் மாரி மழை இவ்­விதம் குறை­வாக பெய்­தது 2013 ஆம் ஆண்­டாகும். இதே­வேளை இந்த வரு­டத்தில் 544.6 மில்­லி­ மீற்றர் மழையே மே வரை பதி­வா­கி­யுள்­ளது. ஜுன், ஜுலை மாதங்­களில் ஒரு மில்­லி­மீற்றர் மழை கூடப் பதி­வா­க­வில்லை. ஜுன் கண்­ணகி அம்மன் சடங்கின் போது குளிர்த்தி பாடி­யபின் மழை பெய்­வது வழக்­க­மாகும். இவ்­வ­ருடம் அந்த மழையும் பெய்­ய­வில்லை.
ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போன்று நீர்­வளம் போதிய அளவு இருந்தும் அதனை சேமிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தவ­றி­வி­ட்­டனர். ஆக உன்­னிச்சை குளம் மட்­டுமே உயர்த்­தப்­பட்டு குடி­நீ­ருக்கும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. நவ­கிரி குளத்­தி­லி­ருந்து குடிநீர் திட்­டத்தை ஆரம்­பித்தால் போரை­தீவு மற்றும் பட்­டிப்­பளை பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்கு குடி­நீரை தாரா­ள­மாக விநி­யோ­கிக்க முடியும் என்று கூறப்­ப­டு­கின்­றது. உறு­காமம், கித்துள் ஆகிய இரு குளங்­க­ளையும் இணைக்கும் திட்­டமும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதற்கு 200 கோடி ரூபா தேவை­யென மதிப்­பீடு செய்­யப்­பட்­­டுள்­ளது. இத்­திட்­டத்தின் மூலம் கட­லுக்கு வீணே செல்லும் முந்­தாளை ஆற்று நீரை தேக்­கு­வதன் மூலம் செங்­க­லடி தொடக்கம் வாகரைவரை கூட குடி­நீரை விநி­யோ­கிப்­ப­­துடன் மேலும் கூடு­த­லான ஏக்கர் நிலத்தில் நெற்­செய்­கைக்கு பாசன வச­தியை செய்ய முடியும் எனவும் கல்­குடா தொகு­தியில் வெள்ளப் பெரு­க்கை கட்­டுப்­ப­டுத்த முடி­யு­மெ­னவும் அறிக்கை செய்­யப்­பட்­டுள்­ளது.
இந்த இணைப்புத் திட்­டத்­திற்கு நிதி­யு­தவி செய்ய உலக வங்கி முன்­வந்­தது. எனினும், அவ்­வாறு இரு குளங்­க­ளையும் இணைத்தால் மேற்கில் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள டம்­பிட்­டிய குளம் நிரம்பி அப்­ப­குதி நீரில் மூழ்கும் அபாயம் ஏற்­ப­டு­மென அப்­ப­குதி வாசிகள் ஆர்ப்­பாட்டம் செய்­தனர். அத­னை­ய­டுத்து உலக வங்கி பின்­வாங்­கி­விட்­டது. பின்­வாங்க வேண்­டா­மென மட்டு.மாவட்ட மக்கள் பதி­லுக்கு ஆர்ப்­பாட்டம் செய்ய முன்­வ­ர­வில்லை. உறு­காமம் - கித்துள் இணைப்பின் மூலம் வரு­டாந்தம் இரண்­டா­யிரம் மில்­லியன் கன­மீற்றர் நீரை குடி­நீ­ருக்கு வழங்­கலாம் எனவும் அறிக்­கைகள் தெரி­வித்­துள்­ளன.
அபி­வி­ருத்தி பற்றி பேசும் போது நீடித்து நிலைத்து நிற்கும் அபி­வி­ருத்தி என்று பேசப்­ப­டு­கின்­றது. ஆனால் வரட்­சியை பற்றி பேசும் போது பௌஸர் மூல­மாக யானைப் பசிக்கு சோளப் பொரி என்ற நிலையில் தற்­கா­லிக தீர்வே வழங்­கப்­ப­டு­கின்­றது. பௌஸர் நீர் சகல மக்­க­ளையும் சென்­ற­டை­யுமா? என்­பது ஒரு கேள்வி. அவ்­வாறு வழங்­கு­வ­தற்­கான ஆளணி மற்றும் வாகன வசதி பிர­தேச சபை­யிடம் இருக்­கின்­ற­னவா? என்­பது மற்­றைய கேள்வி. அவ்­வாறு இருப்­ப­தாக எடுத்துக் கொண்­டாலும் நீண்ட தூரம் சென்று குடி­நீரை எடுத்­து­வர வேண்­டி­யுள்­ளது.
போர­தீவு பற்று பிர­தேச சபை களு­வாஞ்­சிக்­குடி பிர­தேச சபை­யி­லி­ருந்து நீரை பெற்றுச் செல்­கின்­றது. வாகரை பிரி­வி­லுள்ள கிரா­மங்கள் நீண்ட இடை­வெ­ளியில் இங்­கொன்றும் அங்­கொன்­று­மாக உள்­ளன. இதன் கார­ண­மாக ஒரு நாளைக்கு ஒரு கிரா­மத்­துக்கு நீரை விநி­யோ­கிக்க முடி­யு­மென அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.
நீடித்து நிலைத்து நிற்கும் அபி­வி­ருத்தி என்று கூட்­டங்­களில் கோஷ­மி­டப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யானால் குடிநீர் பிரச்­சி­னைக்கு மட்­டு­மன்றி மட்­டக்­க­ளப்பில் தற்­போது உயி­ரோட்­ட­மான பிரச்­சி­னை­யா­க­வுள்ள பிரச்­சி­னைக்­கு­மான தீர்வு யானை பசிக்கு சோளப் பொரி­யாக அமையக் கூடாது.
இன்­னொரு பிர­தேச செய­லாளர் பிரிவில் 11க்கு மேற்­பட்ட கிரா­மங்­களில் வரு­டா­வ­ருடம் வறட்சி ஏற்­ப­டு­கின்­றது. இதற்கு எவ்­வா­றான தீர்வு காணப்­பட வேண்டும் என்று அப்­ப­குதி அதி­கா­ரி­யொ­ரு­வ­ரிடம் கேட்­ட­போது, வறட்சி இல்­லாத பகு­தி­களில் குடி­ய­மர்த்த வேண்டும் என்று பதி­ல­ளித்தார். இதிலும் அர்த்­த­மில்­லா­ம­லில்லை. அரை­வா­சிக் கும் மேற்பட்ட பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் அநே­க­மான கிரா­மங்களில் வறட்சி ஏற்­ப­டு­கி­றது.
இவ்­வாறு 2012 ஆம் ஆண்டு கணக்­கெ­டுப்பின் படி 1,62,742 குடும்­பங்­களை சேர்ந்த 5,86,400 பேர் மட்டு. மாவட்­டத்தில் வசிக்­கின்­றனர். இவர்­களில் 71,479 குடும்­பங்­களை சேர்ந்த 2,52,679 பேர் வறட்­சி­யினால் பாதிக்கப்­பட்­டுள்­ளனர் என அறிய வரு­கின்­றது. குடி­ய­மர்த்­து­வது சாத்­தி­ய­மில்லை என்­பது யாவ­ருக்கும் புரியும். அதே­வேளை குடிநீர் விநி­யோ­கமும் வறட்சி நிவா­ர­ணமும் தற்­கா­லிக தீர்­வா­கவே அமையும். வறட்சி நிவா­ரணம் இழப்பு முழு­வ­தையும் ஈடு செய்­யவும் மாட்­டாது. 2010 ஆம் ஆண்டில் ஏற்­பட்ட வெள்ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு நட்­ட­ஈ­டாக ஒரு ஏக்­க­ருக்கு இரண்டு புசல் வரை நெல் மட்­டுமே வழங்­கப்­பட்­டது. இது சோளப் பொரி ஆகாதா?
2013 இறு­தியில் ஏற்­பட்ட வறட்சி கார­ண­மாக 2014 சிறு­போகம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. நீர் தட்­டுப்­பாடு கார­ண­மாக நவ­கிரி திட்­டத்தில் மட்டும் 6000 ஏக்கர் சிறு­போகம் செய்கை பண்­ணப்­ப­ட­வில்லை. என்று நீர்ப்­பா­சன பணிப்­பாளர் எஸ்.மோக­ன­ராஜா தெரி­வித்தார். மாகாண நீர்­பா­சன திட்­டத்தின் கீழ் நீர்ப்­பற்­றாக்­குறை கார­ண­மாக சுமார் இரண்­டாயிரம் ஏக்­கரில் சிறு­போகம் செய்­கைப்­ பண்­ணப்­ப­ட­வில்லை என மாகாண நீர்ப்­பா­சன பணிப்­பாளர் தெரி­வித்தார். மழையை வேண்­டு­வ­துடன் மழைக்­கா­லத்தில் கட­லுக்கு செல்லும் நீரை தேக்­கு­வ­தற்கும் உறு­காமம் - கித்துள் இணைப்பு போன்ற நட­வ­டிக்கை மூலம் தீர்வு காணலாம்.
ஆனால், நாம் இங்கு வலி­யு­றுத்த விரும்­பு­வது குடிநீர்ப் பிரச்­சி­னை­யாகும். இதற்கு அதி­கா­ரிகள் அர்ப்­ப­ணிப்­புடன் பணி­பு­ரிய வேண்டும். குறு­மண்­வெளி ஏற்று நீர்ப்­பா­சனத் திட்டம் கட்­டடம் மட்­டுமே எஞ்­சி­யுள்­ளது. வெல்­லா­வெ­ளியில் 98 இலட்சம் ரூபா செலவில் ஆரம்­பிக்­க­ப்பட்ட மற்­றொரு திட்டம் திறந்து வைக்கப்­ப­டா­மலே கைவி­டப்பட்­டது. கண்­ண­கி­புரம் கிழக்கில் உத்­தே­சிக்­கப்­பட்­ட கிரா­மிய நீர் விநி­யோகத் திட்­டத்­திற்கு என்ன நடந்­தது என்று தெரி­ய­வில்லை.
உன்­னிச்சை நீர் சுத்­தி­க­ரிப்பு நிலையம் வவு­ண­தீவு கிரா­மத்தில் உள்­ளது. உன்­னிச்சை குளம் வவு­ண­தீவு பிர­தேச செய­லாளர் பிரிவில் அமைந்­தி­ருக்­கி­றது. ஆனால் வரட்­சி­யான வவுண தீவும் அதனை அண்­டிய பல கிரா­மங்­களும் உன்­னிச்சை நீர் விநி­யோ­கத்­திட்­டத்தில் ஆரம்­பத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. திட்­டத்தை வகுத்­த­வர்­களின் கவ­ன­யீ­னமே இதற்கு காரணம் என்று பின்னர் கூறப்­பட்­டது. மக்­களும் மக்கள் பிர­தி­நி­தி­களும் குரல் கொடுத்­ததன் கார­ண­மாக இப்­போது 2 ஆம் தட­வை­யாக சில பகு­திகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.
மாந்­தீவு தொழுநோய் வைத்­தி­ய­சா­லைக்கு இப்­போது சிறிய கொள்­க­லன்­களில் படகு மூலம் நீர் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றது. உன்­னிச்சை நீர் விநி­யோகத் திட்டம் தீட்­டப்­பட்ட போது மாந­கர சபைக்கு உட்­பட்ட மாந்­தீவு உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. இதனை அறிந்­தி­ராமல் மாந்­தீவு பிர­தேச சபை பிரி­வான வவுண தீவுக்கு உட்­பட்­டது என உணர்ந்து கொண்­டதால் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்று பின்னர் கூறப்­பட்­டது. இந்தத் தவறு காரண­மாக மாந்­தீ­வுக்­கான குடிநீர் விநி­யோகம் இன்று பல் ஈற்றுக் குச்சும் ஆப்பும் தேவைப்­படும் கதை­யா­கி­விட்­டது.
நாட்டில் நில­விய அசா­தா­ரண நிலை காரணம் என்று கூறப்­ப­டலாம். அனைத்து விட­யங்­க­ளுக்கும் அது ஏற்­பு­டை­ய­தாக மாட்­டாது. ஓர் அனர்த்தம் முடி­வ­டையும் தறு­வாயில் மற்­றைய அனர்த்தம் வந்து விட்டால் முன்­னைய அனர்த்தம் பழங்­க­தை­ய­ாகி­விடும். பருவ மழை­யுடன் வெள்ளம் ஏற்­பட்டால் பின்பு வெள்ளம் கார­ண­மாக வரும். எனவே இவற்றை விடுத்து இனி­மே­லா­வது காத்­தி­ர­மான திட்­டங்­களைத் தீட்­டவும் அவற்­றுக்கு தேவை­யான பணத்தை பெறவும் பெற்றுக் கொடுக்­கவும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரும் முன்வர வேண்டும். மாறாக பேச்சாலும் எழுத்தாலும் மக்களை திருப்திப்படுத்துவதுடன் மட்டும் நிற்கக் கூடாது.(vk)
(பாக்­கி­ய­ராஜன்)(tks sajeev)
SHARE

Author: verified_user